tamilnadu

img

6 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கூலிப்பிரச்சனை மாவட்ட ஆட்சியரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் மனு

கோவை, மார்ச். 2-  கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறித் தொழிலாளர்களுக்கு உடனடி யாக கூலி உயர்வு வழங்க வேண்டு மென கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்ட மைப்பினர் கோவை மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் சுமார் 2.50 லட்சம் விசைத் தறிகள் இயங்கி வருகின்றன. அதில்  95 சதவிகித விசைத்தறிகள் கூலியின்  அடிப்படையில் செயல்பட்டு வருகின் றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுக ளாக விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனை கண்டித்தும், தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நி லையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்ட மைப்பினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து கூலி உயர்வு வழங்க நடவ டிக்கை எடுக்க கோரி மனு அளித் தனர். இதனைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், கூலி உயர்வு பிரச்சனை கடந்த 6 ஆண் டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு  காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு பிரச்சனையை எடுத்துக் கூறியதில் ஒரு வாரத்திற்குள் கூலி உயர்வு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார். இதற்கு தீர்வு காணாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப டுவோம் என தெரிவித்தார்.