கோவை, மே 11-அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் யுபிஎஸ்கருவிகளை கட்டாயம் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நரம்பியல் துறை தீவிர சிகிச்சை பிரிவில்(ஐசியு) அனுமதிக்கப்பட்டு இருந்தநோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்டமின்தடையால், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் தடைபட்டு 5 பேர் உயிரிழந்தனர். எனினும் இந்த சம்பவத்திற்கும், மின்தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர், ஜெனரேட்டர், யுபிஎஸ் கருவிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீவிரசிகிச்சைப் பிரிவுகளில் பொதுப்பணித்துறையின் உதவியுடன் யுபிஎஸ் கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்விஇயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், “அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஒருமணிநேரம் பேட்டரி பேக்கப் இருக்கும்வகையில் யுபிஎஸ் கருவிகளைஅமைக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. இது தொடர்பான டெண்டர் விடப்பட்டு பொதுப்பணித்துறையின் உதவியுடன் பணிகள்நடந்து வருகிறது. மேலும்,வெண்டிலேட்டர், ஜெனரேட்டர்பயன்பாடு குறித்து ஆய்வுசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன்கூறியதாவது: கோவை அரசுமருத்துவமனைக்கு உக்கடம்,அரசு கலைக்கல்லூரி என இரண்டுபீடர்களில்இருந்து மின்சாரம்பெறப்படுகிறது. இரண்டு மின்மாற்றிகள் உள்ளது. 3 ஜெனரேட்டர்கள் இருக்கிறது. இதனால்,மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் 123 வெண்டிலேட்டர்கள் இருக்கிறது. இவைபேட்டரியுடன்கூடியது என்பதால்மின்தடை ஏற்பட்டால்20 முதல்30 நிமிடங்கள் வரை வெண்டிலேட்டர் இயங்கும். மேலும், ஜசியு வார்டுகள் அனைத்திலும் யுபிஎஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படாத வகையில் அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர், யுபிஎஸ்,ஜெனரேட்டர்களின் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசோகன் கூறினார்.