ஈரோடு, ஆக. 26- புதிய வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்துவதை, குறிப்பிட்ட சில ருக்கு ஒப்பந்தம் வழங்கி, போலியா னவற்றை வழங்கி வருவதாக ஆட்சி யரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று ஸ்டிக்கர் ஆர்ட்டிஸ்ட் நலச்சங்கத்தின் தலைவர் கே.ஆனந்தன் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுக்கு முன், உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை (எச்.எஸ்.ஆர்.பி.,) என, பார் கோடு உடன் அறிமுகம் செய்து, அதில் தவறு இருப்பதாக கூறி, அதனை பயன்படுத் தக்கூடாது என்றனர். தற்போது, அதே போன்ற நம்பர் பிளேட்களை, அந்தந்த வாகன விற்பனை நிறுவனங்களே தயாரித்து வழங்குவதாக கூறி உள்ள னர். ஆனால், இதனை அவர்கள் வழங்காமல், குறிப்பிட்ட நபரை நிய மித்து, அதில் பார் கோடு, சென்சார் என எந்த நவீன தொழில் நுட்ப வசதியும் இன்றி, போலியான, தரம் குறைந்த நம்பர் பிளேட்களை வழங் குகின்றனர். இதற்காக எந்த அரசாணையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட நபரிடம்தான் நம்பர் பிளேட் பெற வேண்டும் என எந்த அறிவிப்பும் செய்யாமல், பெட்ரோ லால் அழிக்கும் தன்மை உடைய பிளேட்களை வழங்குகின்றனர். இதுபற்றி தெளிவுபடுத்தி, போலி களை தவிர்க்க வேண்டும். ஸ்டிக்கர் ஆர்ட்டிஸ்ட் தொழிலை நம்பி, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் உள்ளோம். எங்களது தொழிலை அழிக்கும் வகையில் செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளனர்.