கோவை, ஜூன் 22 - குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி திமுக சார்பில் சனி யன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கைதாகி னர். தமிழகத்தில் குடிநீர் பற்றாக் குறை மிகக் கடுமையாக உள்ளது. இந்நிலையில் போர்க்கால அடிப் படையில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி மாநிலம் முழு வதும் கண்டன இயக்கம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி திரு வள்ளுவர் திடலில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல் வராஜ் தலைமையில் சனியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், குடி நீர் பிரச்சனையைத் தீர்க்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள் ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், முன் னாள் மத்திய அமைச்சர் மு.கண் ணப்பன் உள்ளிட்ட 2 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன் தலைமை யில் காவல்துறையின் அனும தியை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்ட னர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன், முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், தீர்மானக் குழு இணைச்செயலாளர் முத்து சாமி, மாவட்ட துணை செயலா ளர் வடவள்ளி துரை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் குடிநீர் பிரச்ச னையை தீர்க்க தவறிய எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்டம், மாந கரம் கருங்கல்பாளையம், காந்தி சிலை முன்பு கழக துணை பொது செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலையில் மாபெரும் கண் டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.