tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி வீரகனூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம், ஜுலை 30- குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-ஆவது வார்டு சொக்கனூர்  பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங் காததை கண்டித்து செவ்வாயன்று வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போராட் டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் குடிநீர் கிடைப்பதே மிகவும் அரிதாக உள்ளது. பள்ளிக்கு  செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்லும் பெண்களும்  ஈரத்துண்டை தண்ணீரில் நினைத்து முகத்தையும்  உடலையும், துடைத்துக் கொண்டு செல்லும் அவல  நிலையில் உள்ளோம். தண்ணீர் இல்லாமல் நாங்கள்  படும் கஷ்டம் அதிகாரிகளுக்கு புரிவது இல்லை. அதனால் தான் இன்று எங்களது ஒருநாள் வேலை கெட்டாலும் சரி என்று, மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து  இந்த வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து வீரகனூர் பேரூராட்சி செயல் அலு வலர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.