tamilnadu

img

ஊரடங்கை பயன்படுத்தி நாட்டின் வளங்களை சீரழிக்காதே

மத்திய  தொழிற்சங்கங்கள்  ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 3 –  ஊரடங்கு, பொது முடக்கத்தை பயன்படுத்தி இந்திய நாட்டு வளங் களை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னைக்காட்டிலும் தீவிரமாக மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற் றின் காரணமாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் கார்ப்ரேட்டுகளின் நலனை பாதுகாக்க இந்திய வளங் களை சீரழித்து வருகிறது. இத்தகைய மத்திய பாஜக அரசின் நடவடிக் கையை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி யன்று எழுச்சிப் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத் தது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி செய லாளர் தங்கவேல், எச்எம்எஸ் ராஜ மணி, ஐஎன்டியுசி ஆர்.பாலசுந்தரம், எல்பிஎப் மணி, ஏஐசிசிடியு தாமோத ரன், எஸ்டிடியு ரகுபுரிஸ், எம்எல்எப் ஷாஜகான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தியாகி குமரன் சிலை அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலத் தலைவரும், திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினருமான கே.சுப்ப ராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பின ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.தங்கவேல் ஆகியோர் பங் கேற்று மத்திய அரசின் தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். இப்போராட்டத் தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர் மற் றும் எல்பிஎப் சிதம்பரசாமி, சரவணன், எம்எல்எப் சு.சிவபாலன், வடிவேல், எச்எம்எஸ் செயலாளர் முத்துச்சாமி, குணசீலன், ஐஎன்டியுசி சார்பில் பெரு மாள், சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோல், திருப்பூர் மாவட்டத் தில் திருப்பூர், ஊத்துக்குளி, பல்ல கவுண்டம்பாளையம், குன்னத்தூர், காங்கேயம், வெள்ளகோவில், அவி நாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட 150க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தருமபுரி 

தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சுமார் 300 மையங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜிவா, மாவட் டச் செயலாளர் சி.நாகராசன், ஏஐடி யுசி மாவட்டசெயலாளர் பி.மணி, ஏஐசி சிடியு மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதி ரான முழக்கங்களை எழுப்பினர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, கொங்கனாபுரம், இளம்பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, எல்பிஎப் நிர்வாகி பழ னியப்பன், ஏஐடியுசி முருகன், எச்எம் எஸ் கணேசன் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உதகை மத்திய பேருந்து நிலையம், கோத்தகிரி போக்குவரத்து டிப்போ,கூடலூர் பேருந்து நிலையம், சேரம்பாடி பஜார், பந்தலூர், மஞ்சூர் பஜார், கொலக்கம்பை பஜார், தாய்சோலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், செயலாளர் ஆர்.ரமேஷ், பொருளாளர் நவீன், சந் திரன், எல்பிஎப் மண்டல செயலாளர் நெடுஞ்செழியன், துணைச்செயலாளர்‌ ரத்தனகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பி னர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், அகில இந்திய விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  இதேபோல், அரசு போக்குவரத்து, பிஎஸ்என்எல், மின்வாரியம், அரசு ஊழி யர் சங்கம்,  வங்கி, கட்டுமானம், முறை சார தொழிலாளர்கள், ஆட்டோ, சாலை போக்குவரத்து உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் அனைத்து மாவட் டங்களிலும் நூற்றுக்கணக்கான இடங் களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றது. இதில், சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டி யுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பங் கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றோர் தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு சீர்குலைப்பதை கண் டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவ டிக்கைகளை கைவிட வேண்டும். வேலை நீக்கம், சம்பள வெட்டு, அவுட் சோர்ஸிங் முறையை கைவிட வேண் டும்.  நிரந்தர மற்றும் கேசுவல் ஒப் பந்த தொழிலாளர்கள் அனைவருக் கும் முழு சம்பளம் வழங்கிட வேண் டும் உள்ளிட்ட பதினேழு அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.