tamilnadu

img

தேர்தலை காரணம் காட்டி நலவாரியப்பணிகளை முடக்காதே

அனைத்து கட்டுமான தொழிற்சங்கம் முற்றுகை

கோவை, டிச. 17– தேர்தலை காரணம் காட்டி நலவாரியப்பணிகளை முடக்கக் கூடாது என கட்டுமானத் தொழி லாளர் நலவாரிய அலுவலகத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, தேர்தலைக் காரணம் காட்டி  தொழிலாளர் நலவாரியப்பணி களை அதிகாரிகள் நிறுத்தி வைத் துள்ளனர். இதனால் தொழிலா ளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தலுக்கும் நலவாரியத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.  எனவே, தேர்தலை காரணம் காட்டி நலவாரியப் பணிகளை முடக்கக் கூடாது.  கோவை நலவாரிய அலு வலகத்திற்கு நிரந்தரமான தொழி லாளர் உதவி ஆணையர் இல்லை. எனவே, நிரந்தரமாக ஒரு அலு வலரை நியமிக்க வேண்டும்.  நலவாரிய திட்டங்களை தொழி லாளர்களிடம் எடுத்துச் செல்வ தில் தொழிற் சங்க தலைவர்கள் முக்கியப் பங்காற்றி வருகிறார் கள். ஆனால், தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. மாறாக அவர்களை ஏஜண்டுகள் என்று இழிவாக அழைக்கின்றனர். இந்த போக்கை அதிகாரிகள் மாற்றிக் கொள்ள வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். இதில் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்தப் படவேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த முற்றுகையின்போது ஏஐடியுசி சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, என்.செல்வராஜ், பழனிச்சாமி, ஐஎன்டியூசி சிரஞ்சீவி, எச்எம்எஸ் ஜி.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.