திருப்பூர், நவ. 21 – ஊத்துக்குளி வட்டத்தில் குடியி ருக்க வீடில்லாமல் வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர் களை விட்டுவிட்டு, தகுதியில்லாதவர் களுக்கு அரசு விழாவில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊத்துக்குளி வட்டம் தென்முகம் காங்கேயம்பாளை யம் கிராமத்திற்கு உட்பட்ட கஸ்தூரி பாளையம் ஆதிதிராவிடர் குடியிருப் பைச் சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாருடன் ஊத்துக்குளி வட் டாட்சியர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இம்மனு வில் கூறியிருப்பதாவது, கஸ்தூரி பாளையம் ஆதிதிராவிடர் குடி யிருப்பில் வசிக்கும் மக்கள் வீட்டு மனைப் பட்டா கோரி கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மனு அளித்திருந்தனர். விவசாய கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யக்கூடிய ஏழை மக்கள். வீட்டு வசதி இல்லாமல் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இட நெருக்கடியில் வசித்துவரும் நிலை உள்ளது. அத்துடன் தற்போது வேலைவாய்ப்பும் குறைந்துவிட்ட தால் சிரமமான நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே முதல்வரின் சிறப்புக் குறை தீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்திருந்தனர். இதைய டுத்து தனித் தாசில்தார் உள்ளிட்ட அதி காரிகள் விசாரித்துச் சென்றனர். எனவே, விரைவில் பட்டா வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மக்கள் இருந்தனர். ஆனால் நவம்பர் 18ஆம் தேதி ஊத்துக்குளி வட்டத்தில் மாநில அமைச்சர், தொகுதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட விழாவில் கஸ்தூரிபாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த 13 பேருக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டா பெற்றவர்கள் பலர் இலவச வீட்டுமனைப் பட்டா பெறத் தகுதி யில்லாதவர்கள். பலர் கஸ்தூரிபாளை யத்திலேயே வசிக்காத நபர்கள் ஆவர். அரசுத் திட்டத்தில், யாரோ சிலர் கை காட்டும் நபருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு குறை தீர் முகாமில் அளித்த மனுக்களை முறையாக பரிசீலிக்காமல் வேண்டிய வர், வேண்டாதவர், ஆளும் கட்சிக்கு வாக்களிப்போர் என்ற ரீதியில் பட்டா வழங்கப்பட்டிருப்பது நியாயமான தேவையுள்ள மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகும். எனவே மேற்படி அரசு விழாவில் வழங்கப்பட்டா பட்டாக்களை நிறுத்தி வைக்க வேண்டும், ஏற்கெனவே முதல்வர் சிறப்பு முகாமில் மக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஊத்துக்குளி வட்டாட்சியர் கார்த்தி கேயன் இந்த மனுவைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.