tamilnadu

img

காவல் ஆய்வாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு திமுகவினர் புகார்

கோவை, பிப். 3–  மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச் சாமி என்பவர் சட்டவிரோத நடவடிக்கைக்கு துணை போவ தாக குற்றஞ்சாட்டி திமுகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் திங்களன்று புகார் அளித்தனர்.  இதுகுறித்து திமுகவினர் அளித்த புகார் மனுவில் கூறியி ருப்பதாவது, கோவை மாவட்டம், மதுக்கரை காவல்நிலைய ஆய்வாளராக இருப்பவர் தூயமணி வெள்ளைச்சாமி. இவரது காவல்நிலையத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட் டத்தில் கேரளாவிலிருந்து வரும் லாட்டரிகள், ஆன்லைன் லாட்டரிகள் விற்கப்படுகிறது. எம் சாண்ட் மணல் கேரளா விற்கு கடத்தப்பட்டு வருகிறது. எனவே, இதற்கு உதவிகர மாக இருக்கும் இவர் மீது துறைரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும். மேலும் இவரை பணியிடை மாற்றம்  செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும்  இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்  சென்றால், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும்,  புகார் கொடுப்பவர்கள் மீதே பொய் வழக்குகள் போடுவ தாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.  இம்மனுவை, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.