மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
சேலம், அக்.12- சேலத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். தமிழக பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2019 ஆம் ஆண்டிற் கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் செயற்கைக்கோள், வேளாண்மை, வனவிலங்கு பாதுகாப்பு, இயற்கை உரம் மற்றும் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு பள்ளி மாணவிகள் ஐந்தடி உயரத்தில் அட்டையின் மூலம் டெங்கு கொசு உருவத்தை உருவாக்கி காட்சிப் படுத்தி இருந்தனர். மேலும், 455 க்கு மேற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் உருவாக்கி காட்சிப்படுத்தி இருந்தனர். மாணவர்களின் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு களை சேலம் மாவட்டத்திலிருந்து பல்வேறு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.