, பிப்.18- தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து நல்லம்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை செவ்வாயன்று எஸ்.செந்தில்குமார் எம்.பி., தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத் திற்குட்பட்ட சேசம்பட்டி கிராமம். இங்கு உள்ள தெருக்கள் மண்சாலையாக இருந்து வந்தது. இதனையடுத்த அப்பகுதி மக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கான்கிரீட் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படை யில்,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதையடுத்து நல்லம்பள்ளி வட்டம், சேசம்பட்டி கிராமத்தில் செவ் வாயன்று கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை எஸ்.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பி.சி.துரைசாமி, மாவட்ட பிரதிநிதி எஸ்.கே.துரைசாமி, ஏலகிரி நட ராஜ், அவைத்தலைவர் வீரமணி, சிவாடி பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், நல்லம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, கனிமொழி ஆனந்தன் மற்றும் ஊர் பொது மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.