tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

அரூர் அருகே மான் வேட்டை துப்பாக்கியுடன் இருவர் கைது

தருமபுரி, ஆக.5- அரூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்டதாக இரு வரை வனத்துறையினர்  கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பொய்யப்பட்டி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் நுழையும் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான்களை வேட்டை யாடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறை யினர் பொய்யப்பட்டி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, இருவர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில்  சுற்றித் திரிவது தெரியவந்தது. அந்த இருவரையும் வனத் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், செல்லம்பட்டி ஊராட்சி கணவாய்க் குட்டை கிராமத்தைச் சேர்ந்த ரஜாக் மகன் முனுசாமி (40), வாலெடுப்பு கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பசெட்டியார் மகன் ராஜா (55) என்பது தெரியவந்தது. மேலும், மான்களை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிடிப்பட்ட இருவரையும் வனத்துறை யினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி டிஎஸ்பி-யின் அடாவடிக்கு சிஐடியு கண்டனம்

தருமபுரி, ஆக.5- தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ் குமாரின் அராஜக, அடவாடி நடவடிக்கைக்கு சிஐடியு தரும புரி மாவட்டக் குழு வன்மையாக கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.நாக ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி நகராட்சி நிர்வாகம் ஜூலை 10 ஆம் தேதியன்று  துப்புரவு பணியியை  கண்டிராக்ட்டுக்கு விடுவதாக ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து  துப்பரவு பணியை தனியாருக்கு விடுவதை கண்டித்து, சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரி நகர காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று,  ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டம் நடத்தும் இடத்திற்கு வந்த தருமபுரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரான ராஜ்குமார், கூட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிகொண்டே எவ்வித முன் அறி விப்பும் செய்யாமலேயே, பேசிக்கொண்டிருக்கும் மைக்கை  பிடிங்கினார். மேலும், சிஐடியு தலைவர்களை ஒருமை யில் பேசியதுடன், கூட்டத்தில் கலந்து கொண்ட தொழி லாளர்களை விரட்டினார். இவ்வாறு துணை காவல் கண் காணிப்பாளர்  ராஜ்குமார் அராஜக முறையில் நடந்து கொண்டது உள்நோக்கமானது. இவரின் தொழிலாளர் விரோத அராஜக, அடாவடி போக்கை சிஐடியு தருமபுரி மாவட்டக் குழு  வன்மையாக கண்டிக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.