ஆதார் பதிவு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
தருமபுரி, ஆக.3- தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அரூர், தீர்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய துணை அஞ்சலகங்களில் ஆக. 5 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வது தொடர் பான அனைத்து பணிகளையும் செய்வதற்கு அஞ் சல்துறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்கனவே ஆதார் அட்டை எடுத்தவர்கள் அதில் உள்ள பிழை திருத்தம், தொலைபேசி எண் ணை மாற்றுதல், மின்னஞ்சல் மற்றும் பிறந்த தேதி மாற்றுதல் ஆகியவற்றை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செய்துகொள்ளலாம். இதற்கான கட்ட ணம் ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். புதிதாக ஆதார் அட்டை எடுப்பவர்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்ய விரும் புபவர்கள் தங்களது தாய் அல்லது தந்தை அவர் களின் ஆதார் அட்டையுடன் நேரில் வரவேண்டும். மேலும், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற முகாம்களை தங்களது நிறுவனத்தில் நடத்த விரும்பினால் அவர்களது இடத்திலேயே சிறப்பு முகாம் மூலம் அனைவருக்கும் சேவை வழங் கப்படும். இச்சேவையை பெற விரும்புவோர் 04342-260932 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தருமபுரி, ஆக.2- மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, சிறுபான்மையின மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறு பான்மையினரான இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை வழங்குகிறது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக் கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை உள்ளிட்ட படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரவேற் கப்படுகின்றன. இந்த உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில், மத்திய அரசால் நேரடியாக செலுத் தப்படும். கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர் கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள், தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து விண் ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளும், இணையதளத் தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் உரிய காலத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மலர்விழி கேட்டுக்கொண்டுள்ளார்.