ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கிடுக அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
தருமபுரி, ஆக. 29-ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 3ஆவது மாநாடு தருமபுரி அரசு அதியமான் பள்ளி தோழர் எம்.வெற்றிவேல் நினை வரங்கத்தில் வியாழனன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, கே.செளந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் என்.சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ஜி.திருவேங்கடம் அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் (பொ) எம்.பெருமாள், மாவட் டப் பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில இணைச் செயலாளர் கே.குப்புசாமி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், மத்திய அரசை போல் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள் உள் ளிட்ட தொகுப்பூதியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப நல பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு வருமானவரி விளக்கு அளிக்க வேண்டும். 21மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மாதந் தோறும் மருத்துவப்படியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கல்வி கடன், விவசாய கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக கே.செளந்தரம், மாவட்டச் செயலாளராக எம்.பெருமாள், மாவட்ட பொருளாளராக எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர்களாக பி.மோகன்ராஜ், எம்.கோபால், எல்.சண்மு கம், மாவட்ட துணைத் தலைவர்களாக ஜி.திருவேங்கடம், கே.கேசவன், கே.துரை மாநிலசெயற்குழு உறுப்பினராக ஆர்.சுந்தர ராஜன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநில துணைத்தலைவர் எஸ்.சந்திரன் நிறைவுரை யாற்றினார்.
நிவாரணம் கேட்டு கணவர் வீட்டின் முன்பு மனைவி தர்ணா
கோவை, ஆக. 29- கோவையில் இளம் பெண் ஒருவர் நிவா ரண தொகை கேட்டு கணவர் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியை சேர்ந்தவர் சுதா. எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும் கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த தயாள் ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவரால் சுயமாக செயல்பட முடியாத நிலை இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சுதாவிடம் இருந்து விவகாரத்து கேட்டு தயாள் ராஜ்குமார் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர் பாக இரு குடும்பத்தினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, சுதாவிற்கு நிவா ரண தொகையாக ரூ.3 கோடி வழங்குவது என பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதாவிற்கு நிவாரண தொகை இன்னும் வழங்காத நிலையில் தயாள் ராஜ்குமாருக்கு அவரது உறவுக்கார பெண் ஒருவரை திரு மணம் செய்து வைக்க அவரது குடும்பத் தினர் முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்த சுதா புதனன்று ஈரோட்டில் இருந்து கோவை வந்து கணவர் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார். ஆனால், தயாள் ராஜ்குமார் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சுதா தன் கணவர் வீட்டு முன்பு இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பேசியபடி நிவா ரண தொகையினை கொடுக்க வேண்டும், இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தனது கணவருக்கு வேறு திருமணம் செய்ய கூடாது. தனக்கு நிவாரண தொகை கிடைக்கும் வரை இந்த வீட்டினை விட்டு செல்லமாட்டேன் என தெரிவித்தார். இத னையடுத்து காவல்துறையினர் இருவரை யும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.