சேலம், ஜூலை 12- சாதி ஆணவக் படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண் டும் என வலியுறுத்தி சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து நடை பெறும் சாதி ஆணவ படு கொலை யைக் கண்டும் காணாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் எடப் பாடி கே.பழனிசாமி அரசை கண்டித்தும், மேட்டுப்பாளையம் வர்ஷினி பிரியா, கனகராஜ் சாதி படுகொலையை கண்டித்தும். சாதி மறுப்பு திருமணம் செய்ப வர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சாதி ஆணவக் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்பன உளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் துரை.மாதேஷ், மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், மாவட்டகுழு உறுப்பினர் என்.பிரவின்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.