தருமபுரி, ஜூன் 21- தருமபுரி வறட்சி பாதித்த மாவட் டமாக அறிவித்த தமிழக அரசு அதற் கான நிவாரண பணிகளை துவங் கப்படவில்லை. எனவே விவசாயிக ளுக்கு நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வறட்சி நிலவிவ ருகிறது.
கடந்த மார்ச் மாதம் தரும புரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங் கப்படும் என தமிழக அரசு அறி வித்தது. ஆனால் இதுவரை நிவாரண கணக்கெடுப்பு பணியும் நடக்க வில்லை, நிவாரணமும் வழங்க வில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், வறட்சியினால் கால் நடைகளுக்கு தண்ணீர் இல்லை, வைக்கோலும் இல்லை. இதனால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து வைக்கோல் ஏற்றி வரப்ப டுகிறது. அப்படி வரும்பொழுது மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை, ஒடசல்பட்டி, கூட்ரோடு ஆகிய இடங்களில் காவல்துறையினர் மாமுல் கேட்கின்றனர்.
எனவே வைக் கோல் ஏற்றிவரும் வாகனத்தை எந்த தடையும் இன்றி வந்துசேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளேக்கு முன்பு அரசு வைக்கோல் மானிய விலையில் வழங்கியது. இதேபோல் தற்போது வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர் நிலை களை மேம்படுத்த ஏரி, கால்வாய் களை தூர்வார வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயத் திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் வேலை வழங்க வேண்டும். இந்த திட்ட தொழிலா ளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தினர். மேலும், பென்னாகரம் வனப் பகுதியில் விலங்குகளுக்கு குடி தண்ணீர் இல்லாததால் விளை நிலத்திற்கு வந்து சாகுபடி பயிர்களை அழிக்கிறது. குறிப்பாக, பன்றிகள் பயிர்களை நாசப்படுத்துகிறது. எனவே வனப்பகுதியில் விலங் கினங்களுக்கு தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளிலும் விவ சாயிகள் வாங்கிய குறுகிய காலபயிர் கடனை வங்கிகள் கெடுபிடி செய்து வசூல் செய்யும் நிலமை உள்ளது. இதேபோல், ஜப்தி நடவடிக்கையி லும் ஈடுபடுகின்றனர்.
தேசிய வங்கி கள் பயிர்க்கடன் வழங்க மறுக்கிறது. தொடர் வறட்சியை கணக்கில் கொண்டு கெடுபிடி வசூல், ஜப்தியை கைவிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இம்மாவட்டத்தின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள் முதல் செய்யும் ஆவின் நிர்வாகம் கடந்த ஆறுவாரங்களாக பால் தொகையை பட்டுவடா செய்ய வில்லை. எனவே உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியு றுத்தினர்.
இதற்குப்பதிலளித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசுகை யில், வறட்சியால் பாதிப்படைந்த தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், பயிர்க் கடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குறுகிய கால பயிர்க்கடனை நீண்டகால பயிர்க் கடனாக நீட்டிப்புசெய்து கெடுபிடி யாக கடனை வசூலிப்பது நிறுத் திவைக்கப்படும். பால் உற்பத்தி யாளர்களுக்கு உடனடியாக ஆவின் நிர்வாகத்தின் மூலம் வழங்கவேண் டிய நிலுவை பாக்கியை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார். இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா, கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்தானம், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.