உடுமலை, பிப். 14- மக்கள் நலனை புறக்கணிக்கும் மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத் தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். இப்பேரூராட்சி நிர்வாகம் பல் வேறு வகையில் வரி என்ற பெய ரில் வசூல் செய்த போதும், முறை யாக குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றப்பட வில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலு காக்குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் செ.முத்துகண்ணன், தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம், தாலு காக்குழு உறுப்பினர்கள் ஆர்.வி.வடி வேல், ராஜரத்தினம், என்.எஸ்.செல்வ ராஜ், செல்லத்துரை உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.