திருப்பூர், ஆக. 5 – காங்கேயம் நகராட்சியில் வீட்டு வரியை மூன்று மடங்கு உயர்த்தியி ருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் மனு கொடுக்கும் போராட்டம் திங்களன்று நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் காங்கேயம் தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பங்கேற்று கடும் கட்டண உயர்வைக் கண்டித்து உரை யாற்றினார். இதில் தாலுகா குழு உறுப் பினர்கள் எஸ்.குமாரசாமி, எஸ்.வேலுச்சாமி, காங்கேயம் நகரக்கி ளைச் செயலாளர் ஜெ.ராமநாதன், அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற் றோர் அமைப்பின் நிர்வாகி நாச்சி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கெனவே அரசாணைப்படி வரி உயர்த்துவதற்கு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு உள்ளது. மிக குறைந்த அளவு மட்டுமே வரி உயர்த்த லாம் என அதில் கூறப்பட்டிருந்தாலும் அநியாயமாக மூன்று மடங்கு வரி உயர்த்தியிருப்பது பொது மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே இந்த வரியைச் செலுத்த இயலாது என்று பொதுமக் கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நகராட்சி அதிகாரி களிடம் கூறினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் அளித்த மனுக் களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்த னர்.