tamilnadu

பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட அஞ்சல் ஊழியர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

ஈரோடு, மே 23- ஈரோடு அருகே பணி சுமையால் தற் கொலை செய்து கொண்ட அஞ்சல் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்  இழப்பீடும்,  அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென  மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம், தாளவாடி யிலுள்ள அஞ்சல் நிலையத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சி.எஸ்.கிரண் (53). சிந்தஹல்லியைச் சேர்ந்த இவர் அலுவலகம் அருகி லிருக்கும் பணியாளர் குடியிருப்பில் தங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் நிலையங்கள் இயங்கியதால் இவர் தனியொரு வராக வேலை செய்து வந்தார். முன்ன தாக, இவர் வேலை செய்து வந்த  அலுவலகத்தில் மூன்று பணியிடங் களில் இரு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இவருக்கு பணிச் சுமை கூடுதலானது. கடுமையான பணிச் சுமையால் மன உளைச்சலடைந்த இவர் கடந்த வியாழன் (மே 21) அன்று குடி யிருப்பில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மூவர் பணியினை ஒருவரே மேற் கொள்ள நிர்பந்தம் செய்ததே இவரின் மரணத்திற்கு காரணமாகும். எனவே, இவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின்  ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.