கோவை, மே 2-மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள 240 கழிவு பஞ்சுநூற்பாலைகள் 5 நாட்கள் உற்பத்திநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளன. இதுதொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார்விடுதியில் ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் ஆசோசியேசன் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் சங்கத்தின் செயலாளர் ஜெயபால் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை உயர்வானது. பஞ்சாலை தொழில்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும், சலுகையும் வழங்குவதில்லை. கழிவு பஞ்சு விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக கழிவு பஞ்சு நூற்பாலைகள் சரிவை சந்தித்து வருகிறது. ஆகவே, எங்களின் எதிர்ப்பை மத்திய, மாநில அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மே 1 முதல் 5 ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், கழிவு பஞ்சிற்கான ஒரு சதவிகித மார்க்கெட் வரியை குறைக்க வேண்டும். கழிவு பஞ்சு பேக்கிங் வரியை கைவிட வேண்டும். கழிவு பஞ்சுதட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இந்தகோரிக்கை நிறைவேறவில்லையெனில், தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடரும். இந்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.14 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.