tamilnadu

சாலை விபத்தில் மாநகராட்சி அதிகாரி பலி

கோவை, நவ. 2-  கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவல கத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவர் பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டு சனியன்று காலை கோவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே வந்தபோது வாகனம் திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டி ருந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில், காரின் முன் னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோ கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுனர் இயேசுதாஸ் படுகாயம் அடைந்தார்.  இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கரும்பத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.