தேனி, மே 5- தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஐந்சூ பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 44 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர்.இதில் ஒரு பெண் உயிரிழந்தார். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் செவ்வா யன்று மேலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை முதன்மையர் இளங்கோவன் கூறுகையில், “பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த கர்ப்பிணி, உத் தமபாளையத்தைச் சேர்ந்த 50 வயது பெண் ஆகியோ ருக்கும் இதே போல் சின்ன மனூர், போடியில் இருவர் என மொத்தம் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்றிருப்பது இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றார். தேனியில் ஓய்ந்தி ருந்த தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
நமது நிருபர்