tamilnadu

img

கொரோனா வைரஸ்: இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

நாமக்கல், மார்ச் 13- நாமக்கல் மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்ட ரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற் பாடாமல் தடுப்பது குறித்து இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்  கா.மெக ராஜ் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ்  தாக்கம் கண்டவர்கள் தும்மும் போதும்,  இருமும் போதும் வெளிப்படும் நீர்த்தி வலைகள் மூலம் பரவுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்  முறைகள் குறித்தும், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கைகழுவும் முறை கள் குறித்தும் விரிவான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்   பேசுகையில் தெரிவித்ததாவது,  தங்கள்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்  மற்றும் உடன் இருப்பவர்கள் கைகழுவு வதற்கு கிருமி நாசினியுடன் கூடிய கைகழுவும் இடம் அமைத்துக் கொடுக்க  வேண்டும். தங்கள் மருத்துவமனையின்  தரைப் பகுதி கைப்பிடிப் பகுதிகள்,  படுக்கைகள் மற்றும் அனைத்து பயன் பாடு உள்ள பகுதிகளிலும்  5 சதவிகிதம்   லைசால் (ஒரு லிட்டர் லைசாலுக்கு 9  லிட்டர் தண்ணீர்) கொண்டு அடிக்கடி  சுத்தம் செய்திட வேண்டும். நோயாளி களுக்கு முகக் கவசம் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் பற்றியும், கை கழுவுதல் பற்றியும் விழிப்புணர்வு சுவ ரொட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திட வேண்டும்.   மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்போது ஒவ் வொருவரும் கிருமி நாசினி உடன் கை கழுவிய பின்னர் வெளியே செல்லுமாறு அறிவுத்திட வேண்டும்.  மேலும் கைகள் அழுக்காக தென்படும் போது திண்பண்டங்கள் மற்றும் உணவு உண்பதற்கு முன்பும்,  பயணம் செய்து வீடு  திரும்பிய பின்பும், குழந்தைகள் விளை யாடிய பிறகும். கழிவறை பயன்படுத்திய பின்பு கைகளை கட்டாயம் சோப்பு போட்டு  கழுவ வேண்டும். முடிந்தவரை முகத்தினை  கைகளால் தொடுவதை தவிர்க்கவேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் கைபேசி, தொலைக்காட்சி ரிமோட் சுவிட்சுகள், சமையல் லைட்டர் ஆகியவற்றை கிருமி  நாசினிக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.    ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். சளி, இருமல் இருந்தால் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பேசிக்கொள்ளவும். அவசியமில்லாமல்  பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென தங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சாந்தி துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.எஸ்.சோமசுந்தரம் உட்பட இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.