tamilnadu

img

மாநகராட்சி ஆணையரின் உத்தரவை மீறும் ஒப்பந்ததாரர்கள்

நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

ஈரோடு,நவ.15- ஈரோடு மாநகராட்சி ஆணை யரின் உத்தரவை மீறி பணம் பெறும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் செயல்படுத்தி வரும் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு பொது மக்களிடம் பணம் பெறக்கூடாது என்று ஒப்பந்ததாரர்களுக்கு மாந கராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இணைப் பிற்கு ஒப்பந்ததாரர்கள் பொது மக்களிடம் ரூ.10 ஆயிரம் கொடுத் தால்தான் இணைப்பு வழங்கு வோம் என்று தெரிவித்து வருகி றார்கள். அவ்வாறு பணம் தர வில்லை என்றால் வீடுகளுக்கு இணைப்பு தர மாட்டோம் என்று ஒப்பந்ததாரர்கள் பணியை நிறை வேற்றுவதில்லை. எனவே. இவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு நகர, தாலுகா கமிட்டிகள் இணைந்து வெள்ளியன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தானர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, ஈரோடு நகர செயலாளர் பி. சுந்தரராஜன், ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் சி.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

;