அவிநாசி, நவ.17 – அவிநாசி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு வாரமாக பெய்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளான ஆலத்தூர், பொங்கலூர், கானூர், குட்ட கம், மங்கரசுவலையபாளை யம், முறியாண்டம்பாளை யம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக்குளம், வடுகபா ளையம்,வேட்டுவபாளை யம், தண்டுக்காரன்பாளை யம் உள்பட பல கிராமப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக மிதமான தொடர் தொடர்மழை பெய்தது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு காற்று இல்லாமல் அமைதியாக நீடித்த கனமழை பெய்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், ஆண்டுதோறும் ஆடி மாதம் மானாவாரி நிலங்களில் மஞ்ச சோளம் விதைப்போம். அதே போல் இந்தாண்டும் விதைத்துள்ளோம். இந்நிலையில், தற் போது பெய்த மழையால் மஞ்ச சோளம் நல்ல விளைச்சலைக்கொடுக்கும். சோள தட்டு மழையால் உயரமாகவும், தடிமனா கவும் விளையும். இந்த வருடம் மாட்டு தீவனத்திற்கு போதுமான அளவு சோள தட்டு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.