திருச்சிராப்பள்ளி, நவ.18- அகில இந்திய கட்டுமா னத் தொழிலாளர்கள் சங்கத் தின்(சிஐடியு) திருச்சி புற நகர் மாவட்ட 5ஆவது மாநாடு லால்குடி அடுத்த மணக்கா லில் டான்பாஸ்கோ ஹாலில் ஞாயிறு அன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு சக்தி வேல் தலைமை வகித்தார். மாநாட்டை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் துவக்கி வைத்து பேசினார். புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். வேலையறிக்கையை கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பூமாலை வாசித்தார். வரவு– செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சப்த ரிஷ் தாக்கல் செய்தார். தீர்மா னங்களை முன்மொழிந்து சந்திரசேகர் பேசினார். அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட் டது. மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக பி.தியாக ராஜன், செயலாளராக பி. பூமாலை, பொருளாளராக ஏ.சப்தரிஷ், துணைத் தலை வர்களாக ஆர்.மணிவாசகம், ஆர்.சக்திவேல், துணை செயலாளர்களாக சி.குமார், சி.சிவக்குமார் உள்பட 20 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநில துணை பொதுச்செய லாளர் ராஜாமுகமது நிறைவு ரையாற்றினார். ஆண்டனி நன்றி கூறினார்.