tamilnadu

img

மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்திடுக - பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை, ஜூன் 17 -  தாழ்வழுத்த மின் நுகர்வோ ரின் மின் கட்டணத்தை முழு மையாக தள்ளுபடி செய்திட்டு பல் லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக மின்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள் ளதாவது, கோவையில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்கூடங்களை திறக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை, வாழ்க்கை ஆகியவற்றை கணக் கில் கொண்ட கோவையில்  உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர் களின் மின் கட்டணத்தை முழு மையாக தள்ளுபடி செய்ய மின்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை கள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முழுமை யாக செயல்படவில்லை.  ஏற்க னவே  இத்தொழில்கள் நலிவ டைந்து, சிரமப்படுகிற நிலை யில், எந்த வித உற்பத்தி மற்றும் வருமானமின்றி, தொழிலாளர்க ளுக்கு ஊதியம்  கூட வழங்க முடி யாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த  ஜூன் 3 ஆம் தேதியன்று, தமிழ்நாடு  மின் உற்பத்தி  மற்றும் பகிர்மானக்  கழ கம் (மின்சார வாரியம்) சார் பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் “தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின் கட்ட டணம் மற்றும் இதர நிலுவை தொகை, அதற்கான தாமத (அப ராதம்) கட்டணம் இன்றி செலுத் துவதற்கு ஜூன் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்தும்  அதற்குப் பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது” என்றும் அறிவித்துள்ளது.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிறுவனங் கள்  முழுமையாக  செயல்படாமல் இருந்ததால், இந்த மூன்று மாதங் களுக்கான  மின்  கட்டணமாக மிகப் பெரிய தொகையை, ஜூன் 15 ஆம் தேதிக்குள் செலுத்த முடி யாத நிலையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளனர்.  மேலும், இக்காலக்கெடு  முடிந்த  நிலையில்  இன்னும்  3 நாட்களில் நிலுவையில் உள்ள மொத்த மின் கட்டண தொகையை யும்  அபராதத்துடன் கட்ட வேண் டும் எனவும், இல்லாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வும் கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மாதத் திலிருந்துதான் தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துள்ளது. இன்னும் உற்பத்தியே துவங் காத நிலையில், மின்  கட்ட ணம்  செலுத்தா விட்டால்  மின் இணைப்பு  துண்டிப்பு என்றால், மீண்டும் தொழிற்சாலைகள் முடங்கி, லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரமே சிதைந்து கேள்விக்குறியாகி விடும்.  ஆகவே பெரும்  நிதி நெருக்கடி யில் கோவை பகுதியில்  உள்ள  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளுக்கு மார்ச், ஏப்ரல்,  மே மாதங்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்து, கோவையில் உள்ள  இந்த  தொழிற் சாலைகளை  கடுமையான  சரிவி லிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;