மேட்டுப்பாளையம், செப்.29- மேட்டுப்பாளையத்தில் சிபிஎஸ்சி பள்ளிகளுக் கிடையே தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் ஞாயிறன்று துவங்கியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி மைதானத்தில் தென்மண்டல அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற் றுள்ளனர்.இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 36 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவியர் நாக் அவுட் மற்றும் லீக் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, இந்த ஹாக்கி போட்டியை சச்சி தானந்த நிகேதன் பள்ளியின் செயலர் கவிதாசன் துவக்கி வைத்தார். முதல் சுற்றில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டியில் ஓசூரை சேர்ந்த மகரிஷி மந்திர் பள்ளி மற்றும் பெருந்துறை சாகர் பன்னாட்டுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்கள் நாக் அவுட் சுற்றில் மோதினர். இதில் மகரிஷி மந்திர் பள்ளி வெற்றி பெற்றது. தென்மண்டல அளவிலான இந்த ஹாக்கி போட்டிகள் வருகின்ற அக்.3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.