tamilnadu

img

தோழர் டி.லட்சுமணனுக்கு நினைவஞ்சலி

கோவை, ஆக. 25– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் டி.லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தி பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டங்கள் நடை பெற்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களில் ஒருவரும், அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைக்களுக்கான சங்கம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சிறுபான்மை மக்கள் நலக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவ ரான தோழர் டி.லட்சுமணன் திங்களன்று காலமா னார்.

இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன. கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில் தோழர் டி.லட்சுமணன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டிகே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், என்.ஜாகீர், என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

 ஈரோடு

ஈரோடு மாவட்டக் குழு சார்பாக நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை ஏற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரகுராமன், பா.மாரிமுத்து, துரைராஜ் ஆகியோர் தோழர் லக்ஷ்மணனின் பணி களை நினைவு கூர்ந்து பேசினர். இதில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சத்தியமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.இரா.திருத்தணிகாசலம், ஆ.சகா தேவன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் சுப்பிரமணி, தாலுகா செயலாளர் ராமதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சத்தி தாலுகா செய லாளர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அந்தியூரில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள், வி.ச மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.வெங்கடாசலம், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி துரை ஜெய சீலன், சிஐடியு நிர்வாகிகள் ஜி.பழனிச்சாமி, வெங்கடா சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத் தினர்.

தருமபுரி

தருமபுரியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று தோழர் லட்சுமணன் உருவப் படத்துக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட் டக்குழு உறுப்பினர் எம்.முருகேசன் புகழஞ்சலி செலுத் தினர்.

மேலும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஆர்.குழந்தை வேல், டி.உதயகுமார், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.  இதேபோல் வடக்கு மாநகரக் குழு சார்பில் சாமி நாதபுரம் பகுதியில் மாநகர வடக்கு செயலாளர் என்.பிரவின்குமார் தலைமையிலும், ரெட்டியூர் பகுதியில் மாநகரக் குழு உறுப்பினர் வி.வெங்கடேஷ் தலைமையிலும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர்

திருப்பூரில் தியாகி பழனிச்சாமி நிலையம் முன் பாக தோழர் டி.லட்சுமணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் தோழர் டி.லட்சுமணன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மாவட்டக்குழு அலுவல கம், கூடலூர், எருமாடு, அய்யங்கொல்லி, அம்பல மூலா  உள்ளிட்ட பகுதிகளிலும் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், செயற் குழு உறுப்பினர்கள் எல்.சங்கரலிங்கம், கே.ராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு, செயலாளர் ஏ.யோகண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் டி.அடையாளகுட்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர்.

;