tamilnadu

img

கோவை: காணாமல் போன மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - ஒருவர் கைது

கோவையில் காணாமல் போன மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கோவை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம், அருகே உள்ள ராகவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த தம்பதியின் மகள் கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் ஜூன் 13-ம்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் அந்த மாணவி வெள்ளியன்று கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். ஆனால், மாணவி வீட்டுக்கு வரவில்லை. செல்போனில் மாணவியின் பெற்றோர் தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலும் கோவை காட்டூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம் பெண் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினா், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவி தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனா். 


இதனைத் தொடா்ந்து கொலை குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் என்பவரை காவல் துறையினா் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மாணவியின் உறவினா் என்றும், ஏற்கனவே அவா் மாணவியை திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டதாகவும், ஆனால், இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சதீஷ் அவரை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே திருமணமானவா் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மாணவியின் உடல் பிரரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடலில் 3 இடங்களில் கத்தி குத்து இருப்பதாகவும், மாணவியின் கை விரல்கள் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் தான் இந்த கொலை நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனை நிறைவடைந்த நிலையில் மாணவியின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


;