tamilnadu

கோவை இராமேஸ்வரம் ரயிலை இயக்கிடுக

உடுமலை, ஜூன் 9- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளை 3ஆவது மாநாடு பாலாஜி திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது.  இம்மாநாட்டை துணைத்தலைவர் தனுஷ்கோடி தலைமையேற்று சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். துணைத் தலைவர் தி.பரிமேலழகன் வரவேற் புரையாற்றினார். இணைச்செயலாளர் விஜயவர்மன் இரங்கல் தீர்மானம் வாசித் தார். மாவட்ட பொருளாளர் கி.மேக வர்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. ஜெயப்பிரகாசம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் உடு மலை மின்பகிர்மான வட்டச் செயலாளர் கே.லிங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இம்மாநாட்டில், பணி ஓய்வு பெறு பவர்களுக்கு ஓய்வூதிய கொடுப் பாணையுடன் அவர்களது பணிப் பதி வேடு மற்றும் ஓய்வூதிய முன்மொழிவு ஆகியவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்பட வேண்டும்.  உடுமலை,  கொழுமம் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.  உடுமலை வழியாக இயக் கப்பட்டு அகலப்பாதையாக மாற்று வதற்காக நிறுத்தப்பட்ட கோவை - இரா மேஸ்வரம், கோவை- தூத்துக்குடி ஆகிய  விரைவு இரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். வருவாய்த் துறையிலிருந்து 31.03.2010 அன்று ஓய்வுப் பெற்ற தேவாதி ,  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுப் பெற்ற கி.நி.அலுவலர்கள் சோமசுந்தரம் ,  இராசசேகரன்,  பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் நட ராஜன் ஆகியோரின் ஓய்வூதிய முன் மொழிவுகளையும், ஓய்வு பெற்ற கி.நி.அலு வலர்கள் துரைசாமி (மைவாடி), இராமசாமி (குடிமங்கலம்), முத்து ராமலிங்கம் (வட பூதநத்தம்) மற்றும் வரதராஜன், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆகியோரின் திருந்திய ஓய்வூதிய  முன்மொழிவுகளையும் உடனடியாக தலைமைக் கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு 

தலைவராக  எஸ்.கே.தனுஷ்கோடி,  செயலாளராக தா.இ.தாசன், பொருளாள ராக பி.எஸ்.சுரேஷ் குமார், துணைத் தலைவர்களாக எஸ்.விஜயவர்மன், தி. பரிமேலழகன்,  பா.இராமநாதன், இணைச் செயலாளர்களாக கே.ஆறுமுகம், சு.வீர பாண்டியன், எம்.சிவபாக்கியம் உள்ளிட்ட  12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வி.இரவிச் சந்திரன், பெ.கோவிந்தராஜன் தணிக்கை யாளராக தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மு.பாலச் சந்திரமூர்த்தி, மாநில துணைத்தலைவர்  எஸ்.சந்திரன், மாநில துணைத்தலைவர்  இரா.ஜோதி சிறப்புரையாற்றினார். நிறை வாக இணைச் செயலாளர் எம்.சிவ பாக்கியம் நன்றி கூறினார். இம் மாநாட்டில்  40க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட    160 பேர் கலந்துகொண்டனர்.