tamilnadu

img

கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு

கோவை, ஜூன் 5-கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.பீளமேடு தண்ணீர்ப்பந்தல் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். சதாப்தி சேரன் குர்லா எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பீளமேட்டில் நின்று செல்ல வேண்டும். டிஎஸ்பி அலுவலகம் அருகில் புதிதாகக் கட்டியுள்ள காம்பவுண்ட் சுவரை இடித்துவிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவேஇருந்த பாதையை மீண்டும் திறந்து விட வேண்டும். பொள்ளாச்சிஅகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவிடம் மனு அளித்தார்.இதில், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழக பகுதி கழக செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி, எம்.ஆர்.ஆறுமுகம், தமிழ்மொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஆனந்தகுமார், டி.வி.கிட்டு,37 வது வட்டம் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யு.கே.சிவஞானம், பூபதி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.