tamilnadu

img

கோவை: லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது

கோவையில் 12 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரையும் ,தரகரையும்  லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் 

கோவை  கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் இவர் தனது வீட்டு வரிபுத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்த போது புத்தகம் வழங்க 15 ஆயிரம் ரூபாயை தரகர் பாலகிருஷ்ணன்
மூலம் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார் லஞ்சமாக கேட்டுள்ளார்.பின்னர் பேரம் பேசி 12 ஆயிரம் தந்தால்தான் வரிப்புத்தகம் வழங்கபடும் எனக்கூறியுள்ளனர். இது தொடர்பாக குமார் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனை படி ரசாயனம் தடவிய பணத்தை ரவிக்குமாரிடம், குமார் கொடுத்துள்ளார் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கையும் களவுமாக ரவிக்குமாரையும் தரகர் பாலகிருஷ்ணனைபிடித்து விசாரணை மேற்கொண்டதோடு உதவி ஆணையாளர் ரவிக்குமார், தரகர் குணசேகரன்  இருவரையும்  கைது செய்துள்ளனர்