tamilnadu

கோவை மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லத்தி வீச்சு

எஸ்.பி-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை, நவ. 7- பொள்ளாச்சியில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, காவல் உதவி ஆய்வாளர் வாகனத்தின் மீது லத்தியை வீசி விபத்தை ஏற்படுத் திய சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விளக்கமளிக்க வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம்  கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளை யம் பகுதியில் கடந்த திங்களன்று (நவ.4) வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நிற்காமல் சென்றதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சம் பந்தம், இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசி னார். அந்த லத்தி சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடு மாறி மூவரும் கீழே விழுந்தனர். இதில் இளை ஞர்கள் மூவருக்கும் எழும்பு முறிவு ஏற்பட்டு படுகாய மடைந்தனர். இதனையடுத்து, இளைஞர்கள் மீது லத்தியை வீசிய சம்பவத்தில் காவல் உதவி ஆய் வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் இரு சக்கர வாகனத்தில் சென்றோர் மீது லத்தியை வீசிய சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சூயஸ் ஒப்பந்தம், சொத்துவரி உயர்வு

கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு

கோவை, நவ. 7-  கோவை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநி யோக உரிமையை  சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி யதை ரத்து செய்ய வலியுறுத்தியும், சொத்துவரி உயர்வை திரும்பப் பெறக்கோரியும் நவம்பர் 20 ஆம் தேதியன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப் பினருமான நா.கார்த்திக் வியாழனன்று செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 100 சதவிகித சொத்து வரி  உயர்வை ரத்து செய்ய வேண்டும்  என்பதை வலியு றுத்தி வரும் நவ.20 ஆம் தேதியன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரி வித்தார். இந்த பேட்டியின்போது, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பி னர்கள் நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

எச்.ராஜா எந்த நிதியும் வழங்கவில்லை  

சேலம் அரசு கல்லூரி முதல்வர் விளக்கம்

சேலம், நவ. 7- சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு எச்.ராஜா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாணவர்களுக்கு வழங்கிய ஆண்டு  கையேட்டில் பிழையாக அச்சிடப்பட் டுள்ளதாக கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  சேலம் அரசு கலைக்கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கான ஆண்டு கையேடு வழங்கப்பட்டது. அரசு கல்லூரியில் புதிய வகுப்பறை கள் கட்டுவதற்கு, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆண்டு கையேட்டில், கல்லூரியின் வரலாற்று சுருக்கம் பகுதியில், புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட எச்.ராஜா நிதி வழங்கியதாக கூறப் பட்டிருந்தது. இது பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா வின் தொகுதி வளர்ச்சி திட்ட நிதியி லிருந்து ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். அதில் மாணவர்களின் பயன்பாட் டிற்காக 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகி றது. கல்லூரி கையேட்டில் நாடாளு மன்ற உறுப்பினர் டி.ராஜா என்பதற்கு பதிலாக, எச்.ராஜா என பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. எச்.ராஜா எங் கள் கல்லூரிக்கு எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை என தெரிவித்துள் ளார்.

 

காலமானார்

கோவை, நவ. 7–  தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் விநியோக மேலாளரான ஏ.நெல்சன்பாபுவின் தாயாரும், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பின ரும், கோவை மாவட்ட பொருளாளருமான சி.ஜோதி மணியின் மாமியாருமான எஸ்.கமலம் (79) புதனன்று  இரவு காலமானார். இவரின் மறைவையறிந்து மார்க்சிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், எம்.கண்ணன், ஏ.ராதிகா மற்றும் தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.ராஜா, விளம்பர மேலாளர் கே.அழ கப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி  செலுத்தினர். இதையடுத்து இறந்த கமலம்மாளின்  உடல் கோவை திருச்சி சாலையில் உள்ள கல்லறை  தோட்டத்தில் வியாழனன்று தகனம் செய்யப்பட்டது.