tamilnadu

கோவை மற்றும் இளம்பிள்ளை முக்கிய செய்திகள்

ஊருக்கு செல்ல முடியாமல் மன வேதனை- வடமாநில வாலிபர் தற்கொலை

கோவை, மே 11- ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கோவையை அடுத்த கோவில்பாளை யம் பகுதியில் சண்முகம் கார்டன் பகுதியில்  உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய படி அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். விசாரனை யில் அவர் பன்சனன் போய் (20) என்ப தும், ஒடிசா மாநிலம் பலன்கீர் மாவட் டத்தை சேர்தவர் என தெரியவந்தது. இவர்  கடந்த 8 மாதங்களாக தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கு  காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியா மல் மன வேதனையில் இருந்துள்ளார். தாய், தந்தையை காண வேண்டும் என  தனது அண்ணன் சனர்த்தன் போயிடம்  அடிக்கடி கூறிவந்ததாகவும், கூறப்படு கிறது. இதனைதொடர்ந்து பன்சனன்  போய் உடல் மீட்கபட்டு உடற்கூறு ஆய் விற்காக அரசு மருத்துவமனையில் வைக் கபட்டு உள்ளது. சொந்த ஊருக்கு செல்ல முடியாத சோகத்தில் வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மதுபோதையில் இளைஞரை அரிவாளால் வெட்டியவர் கைது

இளம்பிள்ளை, மே 11 - இளம்பிள்ளையில் மதுபோதையில் இளைஞரை அரி வாளால் வெட்டியவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த காடை யாம்பட்டியில்  செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்த வர் மாதேஸ்வரன் மகன் சிவராமன் (33).  அதே பகுதியைச்  சேர்ந்தவர் குணசேகரன் மகன் ரூபன் (எ) வரதராஜ பெருமாள் (29). வியாழனன்று டாஸ்மாக்கில் அதிக அளவில் மதுவை அருந்திய ரூபன், சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ரூபன் மறைத்து வைத்திருந்த அரிவாள் கத்தியால் சிவராமன் தலையை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் விழுந்த சிவராமனை அக்கம்பக்கத்தினர் சீரகாபாடியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மகு டஞ்சாவடி காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து ரூபனைக் கைது செய்தனர்.