கோவை, அக். 22 – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் ஒருங்கிணைப்பில் கோவை யில் நடைபெறும் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத் தில் பயின்ற 29 மாணவர்கள் ஸ்டேட் வங்கி உதவியாளர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள னர். இதுகுறித்து தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கூட்டமைப் பின் இணைச் செயலாளர் வி.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, கோவையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சங்கம் இணைத்து அம் பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தினை கடந்த பத்தாண்டு களுக்கு மேலாக நடத்தி வருகிறது. இம்மையத்திலிருந்து 300க்கும் மேற் பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசு, மத் திய அரசின் ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வெளியிடப்பட்ட ஸ்டேட் வங்கி உதவி யாளர் முதல் நிலை தேர்வில் இம்மை யத்தைச் சார்ந்த 29 மாணவ, மாணவி யர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இம்மையத்தை சிறப்புற நடத்துவதற்கு மேலும் உத்வே கம் அளித்துள்ளது. தற்போது வங்கித் தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிறும் காலை நடைபெற்று வருகிறது.
மேலும், வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் காவலர் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத் தும் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அதி காரி (விஏஓ) தேர்வுக்கான சிறப்பு இல வச இணைய வழி பயிற்சி வகுப்புகளை யும் துவக்க உள்ளது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் மேற்கண்ட தொடர்பிற்கு 9443024973, 9245204942, 9443622408 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் அவர் தெரிவித்துள்ளார்.