ஜூன் 26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்
கோவை, ஜூன் 15- கோவை மண்டல அஞ்சல் அதலாக் எனப்படும் குறைதீர் கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 26ஆம் தேதி காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை கோவை மேற்கு மண்டல உதவி இயக்குநருக்கு வரும் 18 ஆம் தேதிக்குள் அஞ்சல் நீதிமன்ற வழக்கு என உரையின் மேல் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு கோவை மண்டல முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் மணியார்டர், விபி, பதிவு தபால், காப்பீடு மற்றும் விரைவு தபால், சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடர்பான குறைகள் கணக்கு எண், பாலிசி எண், பெயர் மற்றும் முகவரி மற்றும் தபால் நிலையம் பற்றிய விபரங்களுடன் குறைகளுக்குத் தீர்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு : விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு, ஜூன் 15- ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மை யினர் மாணவ - மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர் விடுதிகள் 16, மாணவியர் விடுதிகள் 13, கல்லூரி மாணவர் விடுதிகள் 2, மாணவியர் விடுதிகள் 2 உள்ளன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் ஐடிஐ-யில் படிக்கும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவர்களாவர். விடுதியில் தங்கும் அனைத்து மாணவ, மாணவி களுக்கும் உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். மலைப்பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் கம்பளி, மேலாடைகள் வழங்கப்படும். விடுதியில் சேர விரும்புவோரின் இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்திலோ, இணை இயக்குநர் அலுவலகத்திலோ இலவ சமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். கல்லூரி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றி தழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முட்புதரில் பெண் குழந்தை கண்டெடுப்பு
கோவை, ஜூன் 15- அன்னூரில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறமுள்ள முட்புதரில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் உள்ள முட்புதரில் இருந்து சனியன்று காலை குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட பொதுமக்கள் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அன்னூர் காவல் துறையினருக்குத் தக வல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவக் குழுவுடன் விரைந்து வந்த காவலர்கள் உயி ருக்கு போராடிய நிலையில் முட்புதரில் இருந்த பெண் குழந்தையை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர். அங்கு குழந் தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொப்புள் கொடியில் புழுக்கள் இருந்ததால், குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே, பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.