tamilnadu

விபத்தில் கூட்டுறவு சங்க ஊழியர் பலி

சேலம், டிச.19 ஓமலூர் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்றவரை  எருமை உதைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந் தார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ  இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம், பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சக்கரச்செட்டியப்பட்டி  கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். வியாழ னன்று இருசக்கர வாகனத்தில் காமலாபுரம் அருகே சென்று  கொண்டிருந்தார். அப்போது அங்கு எருமை சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது  கோவிந்தராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எருமை துள்ளி குதித்து அவரை உதைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து கோவிந்தராஜ் மீது  மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி யானார். இதைத்தொடர்ந்து ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஊழியரின் உடலை அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

;