tamilnadu

img

ஜூன் 29, 30ல் சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாடு

திருப்பூர், மே 12 –இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் 12ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு ஜூன் 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக ஊத்துக்குளியில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.ஊத்துக்குளி டவுன் காயத்ரி ரிசப்ஷன் ஹாலில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி தலைமையில் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கட்டுமானதொழிலாளர் சங்கத் தாலுகா செயலாளர் சி.மகேந்திரன் வரவேற்றார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டப் பொருளாளர் டி.குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சி.மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் சிஐடியு மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து விளக்கிக் கூறினர்.கூட்டத்தில் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக ஆர்.குமார், செயலாளராக ஜெ.கந்தசாமி, பொருளாளராக சி.மகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 7 துணைத் தலைவர்கள், 8 துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் சிஐடியு துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் வி.கே.பழனிச்சாமி, கே.பெரியசாமி, கே.ஏ.சக்திவேல், கே.கண்ணையன், ச.பன்னீர்செல்வம், ஆர்.பழனிச்சாமி, எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிறைவாக இன்ஜினியரிங் சங்கப் பொருளாளர் வி.காமராஜ் நன்றி கூறினார்.