tamilnadu

குழந்தைக்கு பாலியல் தொல்லை

கோவை, ஏப். 23- 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் மகேந்திரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி நிஷாவின் மூத்த கணவரின் மகளை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு மகிளா) ஸ்ரீதேவி குற்றவாளியான வளர்ப்பு தந்தைக்கு ஒவ்வொரு சட்ட பிரிவுக்கும் ஒரு ஆயுள் வீதம் மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

;