tamilnadu

சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி முக்கிய செய்திகள்

பெற்றோர் பராமரிப்பு சட்ட அமலாக்கம் நிலை என்ன? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 26 - மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை  அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அய்யாகண்ணு என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு,  2007 ம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும்  பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு 2009ம் ஆண்டு விதிகளை  வகுத்தது. இருப்பினும், இந்த சட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்துவ தில்லை. மகன்களால் பராமரிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகார்களைப்  பெற மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்த சட்டப் பிரிவு அதிகாரம் வழங்கி யுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சட்டத்தை அமல்படுத்த அதி காரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டி ருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக சமூக நலத்துறை  செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

கிசான் திட்டத்தில் முறைகேடு: உதவி இயக்குநர்கள் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி, ஆக. 26- தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்  தில் நடந்த முறைகேடு தொடர்பாக 3 வேளாண்  உதவி இயக்குநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான நிதியுதவியில் முறை கேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து,  தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடை பெற்றது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பிரதம மந்திரி  கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்  பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி  இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன்,  விழுப்பு ரம் மாவட்டம் வல்லம் வேளாண்துறை உதவி  இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக 7 வட்டார தொழில்  நுட்ப ஊழியர்கள், பயிர் அறுவடை பரிசோத கர்கள் என 13 தற்காலிக ஊழியர்களை பணி  நீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார்.

பணிநீக்கம்

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி  கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்  பாக, அந்த திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த  தொழிலாளர்கள் கம்மாபுரம் வட்டார தொழில்  நுட்ப மேலாளர் பாக்யராஜ், நல்லூர் வட்டாரம்  உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன், கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் காப்பீடு  திட்ட தற்காலிக பணியாளர் சுந்தரராமன் ஆகி யோரை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர்  சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.


 

குண்டர் சட்டத்திற்கு எதிராக மனு

சென்னை, ஆக. 26 - கந்தசஷ்டி கவசத்தை  விமர்சித்த புகாரில் சுரேந்தி ரனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி  தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அர சுக்கும், சென்னை பெருநகர  காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன்

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கார்த்  திக் என்பவருக்கு சென்னை  உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.


 

செய்தித் துளிகள்

புதுச்சேரி தொற்று 11,930

புதுச்சேரியில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,930 ஆக அதிக ரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது.

எம்.எல்.ஏ.வுக்கு தொற்று

பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்  வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனி யார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரவு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.

ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே குமாரமங்கலம், ஆதனூர்  கிராமத்தில்  உள்ள மணிமுத்தாறில் இயங்கி வரும் அரசு மணல் குவாரி  மூடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணல் ஏற்றி  வந்த லாரியை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.