இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி
மேட்டுப்பாளையம், செப். 29- சந்திராயன் 2 இறுதிகட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லைஎன மேட்டுப்பாளையத்தில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் இயங்கி வரும் ஆர்.வி கல்லூரியின் பத்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த 197 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி னார். இதனையடுத்து மயில்சாமி அண்ணாதுரை மாணவ, மாணவிகள் மத்தியில் பேசுகையில், “அறிவியல் கல்வியை தாய்மொழியில் கற்க அனை வரும் முன்வரவேண்டும். தமிழ் மொழிக்கல்வி தாழ் வில்லை என்பதை உணர்தல் வேண்டும், நம் நாடு நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக் கும், அதில் சாதிப்பவர்களை அரவணைத்து வாய்ப்பளிக்கும்” என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் கோபால கிருஷ்ணன் மற்றும் செயலர் சுந்தர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதையடுத்து மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில். இம்முறை நாம் அனுப்பிய சந்திராயன் 2 இறுதிகட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாம் இருமுறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். நாம் இறுதியாக அனுப்பிய சந்திராயன் 2 திட்டமும் வெற்றிதான். அதன் இறுதிகட்ட பணியில் மட்டுமே பின்னடைவு ஏற் பட்டது. அறிவியலில் அனைத்துமே பாடம் தான். அடுத்ததாக மீண்டும் நிலவுக்கு ஆளில்லா விண் கலம் அனுப்பி சோதிக்கப்படும். அதில் மனிதர்கள் இருந்தால் என்னென்ன வசதிகள் தேவையோ அனைத்தும் செய்து பரி சோதனை நடத்தப்படும். இதன் பின்னரே நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 செயல் திட்டங்க ளுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணிக்கும் வேறுபாடு உள்ளது. எனவே, சந்திராயன் 2 இறுதி கட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப் பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை தொடர் பும் இல்லை என்பதால் நம் அடுத்தகட்ட இலக்கை நோக்கி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன” என்றார்.