tamilnadu

img

செப்.27ல் முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம்

கோவை மாநகராட்சியின் அநியாய சொத்துவரி உயர்வு

 கோவை, செப். 20– கோவை மாநகராட்சி அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறு வனத்திற்கு குடிநீர் ஒப்பந்தம் ஆகி யவற்றை கண்டித்து வருகிற செப்.27 ஆம் தேதியன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத் திற்கு ஆதரவு திரட்டும் வகையில் அனைத்து கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகராட்சி பகுதியில் நூறு சதவிகித  சொத்து வரி உயர்வை கண்டித்தும், வெளிநாட்டு நிறுவன மான சூயஸ் நிறுவனத்திற்கு  26  ஆண்டுகாலத்திற்கு குடிநீர் வழங் கும் உரிமை வழங்கப்பட்டதை ரத்து  செய்ய வலியுறுத்தியும் வரும் செப்.27 ஆம் தேதியன்று கோவை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.  இந்த முழு அடைப்பு போராட்டத் திற்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை மாநகர பகுதியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தபெதிக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொடர் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக வெள்ளி யன்று திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். இதன்படி உக்கடம் காய்கறி மார்க்கெட், காந்திபார்க், வாழை மண்டி மார்க்கெட், வடவள்ளி, வடகோவை எம்ஜிஆர் மொத்த மார்க்கெட், சாயிபாபாகாலனி, அண்ணா மார்க்கெட், காந்திபுரம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிக ளில் முழு அடைப்பு போராட்டத் திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சார இயக்கத் தின்போது பொதுமக்கள் பேரா தரவை அளித்தனர்.