சென்னை,ஜூன் 12- அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சார்பில் இன்று (ஜூன் 13) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஒருமைப்பாட்டுக்கழகம் சார்பில் ஆறுமுகநயினார், வீ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கொரோனா நோய் பரவலை தடுக்க முன்பைவிட வேகமாக செயல்பட வேண்டும். ஜூன் 13-ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு என்ற முறையில் இந்த நாளை அனுஷ்டிக்க வேண்டும். இந்த நாளில் சமூக வலைத்தள பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.இதில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி 5 பேருக்கு மிகாமல் ஆங்காங்கே ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.