tamilnadu

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, செப். 2- ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரி வித்துள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங் கப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.  எனவே, இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, படிவத்துடன் செப்.31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

;