மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை கண்டித்து கோவை மாவட்டம், ஆத்துப்பாலம் பகுதியில் 6 ஆவது நாளாக அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள், மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் இணைந்து தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். மேலும், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு மற்றும் மதுக்கரை ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்ட பந்தலில் குவிந்திருந்தனர்.