tamilnadu

சேலம் மண்டலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி- ஆய்வு முடிவுகள் வெளியீடு

சேலம், ஜூலை 17-  சேலம் மாவட்டத்தில்  2018- 2019 ஆம் ஆண்டிற்கான பறவைகள் மற்றும் விலங்கு கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் ஆய்வு முடிவுகளை மாவட்ட  வனத் துறை வெளியிட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் மொத்த காடுக ளின் பரப்பளவு 1250 சதுர கிலோ மீட்டர் ஆகும். 217.0 1 கிலோ மீட்டரில் கணக் கெடுப்பு பணி நடைபெற்றது. இதில்  மொத்தம் ஏழு பேர் கொண்ட குழுவில் தன்னார்வலர்கள் 50 பேரும், வனப் பணியாளர்கள் 30 பேரும் கூட்டாக  கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட னர். இதில் வன விலங்குகள் மற்றும்  பறவைகளை பாதைகளில் நடை மேற் கொண்டும், நேரடியாக பார்த்து மற்றும் மறைமுக அடையாளங்களை வைத்தும் புகைப்படக் கருவிகளைக் கொண் டும் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில், காட்டு யானை, சிறுத்தை, காட்டு நாய், குள்ள நரி,காட்டுப் பூனை, கரடி, நாட்டு குரங்கு, காட்டுமாடு, புள்ளி மான், முயல்,  காட்டுப்பன்றி, கீரி, முள்ளம்பன்றி உள் ளிட்ட 23 வகையான வன உயிரிகளும் மூன்று வகைகளைக் கொண்ட பாம்புக ளும் கணக்கெடுக்கப்பட்டது என வனத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.