பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
அவிநாசி, அக். 30- அவிநாசியில் வீட்டின் கதவை உடைத்து தங்கநகைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி சூளை எம்ஆர்பி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் திங்களன்று தனது வீட்டைப் பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென் றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்கச் சங்கலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பிரபு அளித்த புகாரின் அடிப்படையில் அவி நாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளா் கைது
உதகை, அக். 30- கூடலூரில் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்ததாக தனியார் பள்ளியின் கராத்தே பயிற்சியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் செவ்வாயன்று கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள ஒரு தனி யார் பள்ளியில் கராத்தே பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவா் சாபு ஆப்ரஹாம் (55). இவா் அந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒருவரை கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடலூா் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி, அவரது தாயார் செவ்வாயன்று புகார் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, காவல்துறை யினர் போக்சோ சட்டத்தின் கீழ் சாபு ஆப்ரஹாமை கைது செய்தனா். மேலும் மாணவியின் குடும் பத்தை மிரட்டியதாக சாபு ஆப்ரஹாமின் உறவி னா்கள் பிஜூ, பினோய், பினு, ராஜு, ஷாஜி, சாபு, சிரில் ஆகிய 7 பேரையும் கைது செய்துள்ளனா்.
குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
பொள்ளாச்சி, அக். 30 - பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்ற டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோட்டூர் பகுதி மக்கள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத் துள்ள கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பொங்காளி யூர் கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு மிக அருகில் அருந்ததியர் சமூக மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கடந்துதான் பள்ளி மற்றும் கல்லூரி, வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்துவோர் போதையில் குடியிருப்பு பகுதிக் குள் நுழைந்து அங்குள்ள பெண்களிடம் தகாத முறை யில் நடந்து கொள்வதுடன், தகறாரில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதியினர் கடும் துன்பத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற் றக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாயன்று பொள் ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் இரா.இரவிக் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்
பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் கணக்கெடுப்பு தொடக்கம்
திருப்பூர், அக். 30- திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக, பேரிடர் மேலாண்மைத்துறை கணக்கெடுக் கும் பணி புதன்கிழமை முதல் தொடங் கியது. பல்லடம் வட்டம் பருவாய் கிரா மத்தில் 1998-ம் ஆண்டு இலங்கை அகதிகள் முகாம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு ஏராளமான இலங்கைத் தமி ழர்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அகதிகள் முகாமில் வாழும் தமிழ் மக்களின் பயன்பாட் டுக்காக மூன்று ஆழ்துளைக் கிணறு கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக் கப்பட்டது. இந்நிலையில் இவற்றில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் கைவிடப் பட்டன. ஆனால் மூடிவைக்கப்படா மல் இருந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வ லர்கள் அங்கு சென்று இரண்டு ஆழ் துளைக் கிணறுகளையும் கற்களை போட்டு மூடினர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு கள் உள்ளன. அவற்றை மாவட்ட நிர் வாகம் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அவற்றை மூடுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். இதற்கிடையே, காங்கயம் வட் டம் தொட்டிபட்டி, சகாயபுரம் அரு கில் உள்ள காந்திபுரம் ஆகிய பகுதி களிலும், ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ள னர். இதுகுறித்து திருப்பூர் பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் அருணா கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறி வுறுத்தலின்படி, மாவட்டம் முழுவ தும் உள்ள அனைத்து ஊராட்சிகளி லும் கைவிடப்பட்ட அல்லது பயன் படுத்தாமல் உள்ள ஆழ்துளைக் கிண றுகளை கணக்கெடுக்கும் பணியை அக்.30ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. மேலும் மக்கள் தங்கள் பகு தியில் உள்ள கைவிடப்பட்ட நிலை யில் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆழ் துளைக் கிணறுகள் குறித்து 1077 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் பரவலாக மழை
தாராபுரம், அக். 30- தாராபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவ தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தளவாய்பட்டிணம், அலங்கியம், காளிபாளை யம், கொளத்துப்பாளையம், கரையூர், கோவிந்தாபுரம், பொன்னாபுரம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வரு கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். அதேநேரம், தொடர் மழை காரணமாக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். தாராபுரம் பெரியகடைவீதி கார்னரில் காலை வேலை யில் கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலைக்கு செல்வதற்கு காத்திருப்பார்கள். அங்கு வரும் கட்டுமான பொறியாளர்கள் தொழிலாளர்களை கட்டு மான பணியிடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இந் நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரு வதால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக தொழிலாளர்களை அழைத்து செல்ல கட்டிட பொறியாளர்கள் வராததால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இதே போல் செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்க ளும் செங்கல் தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடியாமல் சிர மத்திற்குள்ளாகினர்.
மின் தடை
தருமபுரி, அக். 30- தருமபுரி மாவட்டம், கடத்தூா் கோட்டத்துக்குட் பட்ட இருமத்தூா் துணை மின் நிலையத்தில் அக்.31-ஆம் தேதி (வியாழனன்று) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன் றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி கம்பைநல்லூா், பூமிசமுத்திரம், க. ஈச்சம் பாடி, பள்ளத்தூா், மரியம் பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப் பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூா், வாடமங்கலம், கொண்ரம்பட்டி, திப்பம் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநி யோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளை வஞ்சிக்கும் வங்கிகள்
கடன் தீர்வுக்கு ஒருங்கிணைந்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
திருப்பூர், அக். 30- ஐந்து ஏக்கர் நிலத்துக்கு குறை வாக வைத்திருக்கும் சிறு, குறு விவ சாயிகளுக்கு வங்கிகள் மராமத்துக் கடன் தராமல் வஞ்சிப்பதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் குற்றஞ் சாட்டியுள்ளது. மேலும் விவசாயி கள் கடன் தீர்வுக்கு ஒருங்கிணைந்த ஏற்பாடு செய்திட வேண்டும் என் றும் வற்புறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறிய தாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவ சாயிகள் சுமார் 1லட்சத்து 62 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதில் ஏறக் குறைய 98 ஆயிரம் பேர் குறு விவ சாயிகளாகவும், 64 ஆயிரம் பேர் சிறு விவசாயிகளாகவும் இருக்கின் றனர். இவர்களுக்கு மராமத்துக் கடன் வழங்க வங்கிகள் மறுப்பது மிகப்பெரிய அநியாயம் ஆகும். இந்த விவசாயிகளுக்கு எல்லா வகையான கடன்களையும் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். மேலும் தனியார் வங்கிகள் விவசாயிகளுக்கு நேரடியாக கடன் தராமல், இடைத்தரகர்கள் மூலம் கடன் வழங்குவது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் தேவைக்காக வேறு வழி யின்றி இடைத்தரகர்கள் மூலம் கடன் வாங்கிக் கொள்கின்றனர். மேலும் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில், கந்துவட்டி கடன் வலைக்குள் தள்ளப்படும் அவல நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் வறட்சி காரணமா கவும், நியாயமான விலை கிடைக் காத நிலையிலும் விவசாயிகள் கடன் கட்ட முடியாத நிலை ஏற் பட்டது. இது போன்ற வங்கிக் கடன் நிலுவைகளில் வாராக் கடன் என தனியாக வரையறுத்து, அதற்குரிய வட்டிகளை தனி கடனாக வங்கி கள் பிரித்து வைக்கின்றனர். இதுபோன்ற கடன் பிரச்சனை களில் தீர்வு காண்பதற்கு சமாதானத் திட்டம், லோக் அதாலத் மூலம் என பல திட்டங்களை வங்கிகள் முன் வைக்கின்றன. இது போன்ற கடன்களுக்கு தீர்வு காண சம்பந்தப் பட்ட விவசாயிகளுக்குத் தனித் தனியாக வங்கிகள் அறிவிப்பு செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் இத்திட்டங்களை தெரிந்து கொண்டு கடன் தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வங்கிகள் சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஒன்றாக வங்கிக்கு வரவழைத்து கடன் தீர் வைத் திட்டங்கள் குறித்து தெளி வாக எடுத்துக் கூற வேண்டும். உரிய ஏற்பாடு செய்வதன் மூலம் விவசாயிகள் கடன் கட்டுவதற்கும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வும் வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டார்.