tamilnadu

அவிநாசி , உடுமலை ,திருப்பூர் முக்கிய செய்திகள்

அதிவேகமாகச் சென்ற பனியன் நிறுவன வாகனம் சிறைப்பிடிப்பு

அவிநாசி, ஆக. 26- பணியாளர்களை அழைத்துக் கொண்டு அதிவேக மாகச் சென்ற பனியன் நிறுவன வாகனத்தை அவி நாசியில் சமூக ஆர்வலர்கள் திங்கள்கிழமை  சிறை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு அவிநாசி, தெக்கலூர், கருவலூர், சேவூர், புளியம்பட்டி  உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயி ரக்கணக்கானோர் பணிக்குச் சென்று வருகின்றனர்.  இவர்களை நாள்தோறும் அழைத்துச் செல்வதற்காக வரும் பனியன் நிறுவன வாகனங்கள் அதிவேகமாக வந்து செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரு கிறது. குறிப்பாக அவிநாசி-சேவூர் சாலையில் பனி யன் நிறுவன வாகனங்கள் அதிவேகமாக வந்து செல் வதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், புளியம்பட்டியில் இருந்து 30க் கும் மேற்பட்ட பணியாளர்களை அழைத்துக் கொண்டு பனியன் நிறுவன வாகனம் சேவூர்-அவிநாசி சாலையில் மற்ற வாகனங்களை முந்திக் கொண்டு அதிவேகமாக வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது, சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல றிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இதில் பனியன் நிறுவன வாகன ஓட்டுநர்  சசிக்குமார்(30) மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு, பணியாளர்கள், திருப்பூரில் இயங்கும் பனியன் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநர் சசிக்குமாருக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

உடுமலையில் குரூப் 4 மாதிரி தேர்வு

உடுமலை, ஆக. 25- உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு சார்பில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப் 4 மாதிரி தேர்வை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலை உழவர் சந்தை சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் கடந்த இரண்டு மாதங்களாக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டது. இத்தேர்வு செப்.1 ஆம் தேதி நடை பெற உள்ளது. அதன் முன் நிகழ்வாக மாதிரி போட்டித்தேர்வு ஞாயிறன்று நூலகம் மற்றும் மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளா கத்திலும் நடத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலை வர் இளமுருகு தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன், நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார், வாசகர்வட்ட ஆலோசகர் எம்.பி.அய்யப்பன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) ப.மு அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக உடுமலை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கி போட்டி தேர்வை தொடங்கி வைத்தனர்.

சேவூரில் நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஆக. 26  - சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 200 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. இதில் 8 வியாபாரிகள், 16 விவசாயிகள் பங்கேற்புடன் இந்த வாரம் ஏலம் நடைபெற்றது. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,000  வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ,5,800 முதல் ரூ.6,050 வரையிலும் ஏலம் போனது.

விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருப்பூர், ஆக. 26- திருப்பூர் மாவட்ட விவ சாயிகள் மாதாந்திர குறை தீர்க் கூட்டம் செவ்வாய்க்கி ழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்கே.எஸ்.பழனி சாமி தலைமையில் நடை பெறுகிறது. இதில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக் கைகள், புகார்களை மனுக் களாகத் தரலாம் என்று ஆட்சியரக செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அரசு கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்

அவிநாசி, ஆக. 26- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில்  பி.காம், வணிக நிர்வாக வியல் ஆகிய புதிய பாடப் பிரிவில் சேர விருப்பமுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்லூரி  நிர்வாகத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பது, 2019 – 20 கல்வியாண்டி யில் 6 இளங்கலை பாடப்பிரி வுகள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில் தற் போது பி.காம், வணிக நிர் வாகவியல் எனும் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க  அனுமதி பெறப்பட்டுள் ளது. இப்புதிய பாடப்பிரி வுக்கு முதல் கட்ட சேர்க்கை ஆக.28ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.  இதில் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களும், புதிதாக விண்ணப்பிக்கவுள்ள மாண வர்களும் உரிய சான்றிதழ்க ளுடன் கலந்தாய்வில் பங் கேற்று பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.