மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளி
அவிநாசி, ஆக. 9- தொடர்மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்த நிலையில், அவிநாசி ஒன்றியம் பழனியப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி வழக்கம்போல செயல்படுகின்றது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்து தொடர் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், அவினாசி ஒன்றி யத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பின்புறமாக பழனியப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட நிர்வாகம் அறிவித்த விடுமுறையைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் செயல்பட்டது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மாணவ மாண விகளின் பாதுகாப்பு நலன் கருதி அரசு பள்ளி மற்றும் தனி யார் பள்ளிகள் ஒரு நாள் விடுமுறை என உத்தரவை மீறி செயல்பட்டது. இதுகுறித்து கல்வி அதிகாரியிடம் கேட்ட போது செயல்படுகின்ற பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப் படுமென கூறினார்.
ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
உடுமலை, ஆக. 9- உடுமலைப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத் தில் (ஐ.டி.ஐ)ல் மாணவர்கள் சேரக்கைக்கான கால அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப் படுகின்றன. ஒராண்டு தொழிற்பிரிவில் சேர்ந்து பற்றவைப்பவர் பயிற்சி பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் கடிதம் தாங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தெரியாதவர் கள் கொழுமம் சாலை, உடுமலைப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக இலவசமாக பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரம் அறிய 04252 223340 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள லாம்.